Saturday 27 September 2014


அக்கினிஅரக்கனாய்
ஆகுதிசெய்கிறாய்
உன் வன்மங்களை
ஆயுதமாய் பிரயோகிக்கிறாய்
காற்றின்வடிவாய்
கலைத்து உட்புகுகிறாய்...
கால்முதல் தலைவரை
அத்தனைஅமுதமும்
அதிர அதிர புகட்டுகிறாய்
இதழ்கள் நோக
நீவாசித்த அத்துனை
நரம்புகளும் தொய்ந்து
கிடக்கின்றன சுருதி
கூட்டாமல்
காட்டுதீயாய்
கபளீகரம் செய்தாய்
என்னை
பாலைவனமாகி
வாயுலர்ந்துகிடக்கிறேன்
வாசமாகவருவாயா
வசமாக்கிசெல்வாயா...
வானம்பார்த்துகாத்திருக்கிறேன்
வாய்பிளந்து கிடக்கிறேன்

No comments:

Post a Comment