Saturday 27 September 2014


மீண்டும் ஒருஇரயில் பயணம்
---------------------------------------------------------
மீண்டும் ஒருஇரயில் பயணம்
இந்த முறை என்ன கிடைக்குமோ...??
ஓடும்மரங்கள்
டாடாகாட்டும் குழந்தைகள்
துள்ளிஓடும்ஆட்டுகுட்டிகள்
தொங்கிகொண்டிருக்கும் குரங்குகள்
.அதிர்ந்துபறக்கும் மயில்கள்...
காத்துநிற்கும்மனிதற்கூட்டம்...
அறிமுகமாகும் ரயில்ஸ்னேகம்
அறிமுகமில்லாகுழந்தையின்முத்தம்
பயணத்தில்மட்டும் ருசிக்கும்
ஜ்ங்சன்கடைகாலைநேரக்காபி
சில்லென்றுமுகத்தில்
அடிக்கும்காற்று
சிலநேரம் இஞ்சின்புகை
தூக்கம்கலைக்கும்
தொந்திமாமாவின்குறட்டை
எந்தபிளாட்பாரத்தில்விடுவானோ
எனகாரணமில்லாமலே
புலம்பும்குரல்கள்
நீரழிவுக்காகலோயர்பெர்த்வேண்டும்
வயசாளிகள்
குடும்பத்துடனிருப்பதற்காக
தனியாகவருபரை இருக்கைமாற்றிவிடுபவர்கள்
அதிகாலையில் இறங்க இரவுமுழுவதும்
தூக்கம்தொலைப்பவர்கள்
சில்நேரவாயுதொந்தரவுகள்........இப்படி
எத்தனையோ
ஆனாலும் இரயில்பயணம்தரும்
ஆனந்தத்தை வேறுஎந்தபயணமும்
தருவதில்லை...விமானப்பயணம்கூட...........

No comments:

Post a Comment