Thursday 16 October 2014

பரந்துகிடக்கும் அனாதரவான
மணல்வெளீயில்
உருண்டுஎழு
மீண்டும் விழு
உஸ்ணத்தை உள்வாங்கு...
பனியை பருகு
தப்பிவரும்
தேள்கொடுக்கின்
ருசி அனுபவி
வால்சுட்டிவரும்
பாம்பின்
விசம் நுகர்
எல்லாம்
அந்தநீருக்காகதானே
அதைவழங்கத்தான்
நான் அங்கே
சுற்றிகொண்டிருக்கின்றேனே
மேகமாக உன்னைச்சுற்றி

No comments:

Post a Comment