Thursday 16 October 2014

உள்ளேபுதைந்து
கொண்டிருக்கிறது
நினைவுகள் ஆழியில்நீர்குமிழாய்
சுழன்று
உள்வாங்குகிறது...
மனச்சிந்தனைகள்

மென் தென்றலாய் வருடும்
உனதுபுன்னகை


நீந்தும்மச்சங்களாய்

ஒற்றைக்குயிலின்
சோககீதம் சுற்றிசுழல்கிறது
தனித்துஎதிரொலியாய்

பொங்கிபிரவாகமாய்
நகரும்வெள்ளமாக
எதையும்சட்டைசெய்யாமல்

உருளுகிறது எதிர்காலம்
என்றேனும் சங்கமிக்கும்
தீராக்காதலுடன்....

உன்னில்கரைந்து
நீயாகவேமாறிவிடும்
பேராசையுடன்......

No comments:

Post a Comment