Saturday 8 November 2014

மரணம் இறுதியானது
மரணம் உறுதியானது
....................................................
மரணம் நோயாளிகளுக்கு விடுதலை
வாழ்வைகற்றுத்தரும் நல் ஆசான்
எதுவும் நிரந்தரமில்லை
எனஎடுத்துரைக்கும் கீதையின்
அசல்வடிவம்
அனைவருக்கும்சமப்பங்கீடு
இடமளிக்கும்சமத்துவபுரம்
தத்துவங்களும் ஞானிகளையும்
ஜனிக்கும் போதிமரம்
உலகத்தையே ஒருபிடிச்சாம்பலில்
அடக்கும் ஆன்மயாகசாலை
நிமிர்ந்துநின்றவரும்
நிமிரமுடியாதவரும்
எழுந்துவரமுடியாத
இறுதிசிறை
பூமிப்பந்தின் வெளியேறும் வழி
வாழக்கைபுத்தகத்தின்
கடைசிப்பக்கம்
சிலரின் கண்ணில் கூட
கண்ணீர்வரும் என
மற்றவர் உணரும் ஞானபீடம்
ஜாமீன்வாய்ப்புஇல்லாமல்
இறுதித்தீர்ப்புக்கு
கைதுசெய்யப்படும்
காவல்நிலையம்
மரணம்........
மரணம் இறுதியானது
மரணம் உறுதியானது

Photo: மரணம் இறுதியானது
 மரணம் உறுதியானது
 மரணம் நோயாளிகளுக்கு விடுதலை
 வாழ்வைகற்றுத்தரும் நல் ஆசான்
எதுவும் நிரந்தரமில்லை
 எனஎடுத்துரைக்கும் கீதையின்
 அசல்வடிவம்
 அனைவருக்கும்சமப்பங்கீடு
 இடமளிக்கும்சமத்துவபுரம்
 தத்துவங்களும் ஞானிகளையும்
 ஜனிக்கும் போதிமரம்
 உலகத்தையே ஒருபிடிச்சாம்பலில்
 அடக்கும் ஆன்மயாகசாலை
 நிமிர்ந்துநின்றவரும்
 நிமிரமுடியாதவரும்
 எழுந்துவரமுடியாத 
 இறுதிசிறை
 பூமிப்பந்தின் வெளியேறும் வழி
 வாழக்கைபுத்தகத்தின்
 கடைசிப்பக்கம் 
 சிலரின் கண்ணில் கூட 
 கண்ணீர்வரும் என
 மற்றவர் உணரும் ஞானபீடம்
 ஜாமீன்வாய்ப்புஇல்லாமல்
 இறுதித்தீர்ப்புக்கு 
 கைதுசெய்யப்படும்
 காவல்நிலையம்
 மரணம்........
மரணம் இறுதியானது
 மரணம் உறுதியானது
ஒவ்வொருதினவிடியலும்


உன்னை நினைத்தே


ஒவ்வொரு நொடிமுள்நகர்தலும்


உன்மூச்சுகாற்றாலே


ஒவ்வொருமுறை சுவாசமும்


உன் வாசத்தாலே

ஒவ்வொரு 

துளிநீர்பருகுதளும்

உன் அன்பு ஈரத்ததாலே

ஒவ்வொரு பார்வையும்

உன் 

அன்புஒளிவெள்ளத்தாலே

இந்த ஜென்மத்தின்

முடிவும் உன் நினைவுடனே.........
உன்நினைவுகுளத்தில்


நனைந்துகிடக்கிறேன்


உனதுகனவுமேகத்தில்


கலந்துபறக்கிறேன்


உனதுகற்பனை


சிறகுகளில்

இறகாக இருக்கிறேன்

உன்கவிதை படகின்

துடுப்பாக இயங்குகிறேன்

உன் இமைகுடையில்

விழிம்பாக இருக்கிறேன்

உன் இதழ்மலரில்

ஈரமாக இருக்கிறேன்

உன்இதய கோவிலில்

குடியேறி இருக்கிறேன்

ஆனால் இன்றுவரை

உன்னைக்காணாதிருக்கிறேன்.....

உன் வார்த்தைபோல் யாரும்


என்னோடுபேசவில்லை


உன்பார்வைபோல் எந்தபார்வையும்


பாதித்ததில்லை


உன் நினைவுபோல் எந்தநினைவும்


என்னை ஆட்கொண்டதில்லை

உன் கனவுபோல் எந்தகனவும்

என் உறக்கம்தின்றதில்லை

உன் அருகாமைபோல்

எதுவும் நிம்மதி அளித்ததில்லை

உன் பிரிவுபோல் எதுவும்

என்னைக்கொன்றதில்லை

உன் விழிநீர்போல்

எதுவும் என்னை நனைத்ததில்லை

உன்நினைவைச்சுவைப்பதுபோல்

எதுவும் சுகமில்லை

உன்னோடு வாழாதவாழ்க்கை

எனக்கு வாழ்க்கையே இல்லை

மிஸ்ஸிங் யூ................

நானே நீயாக....என்றென்றும்காதலாய்
-------------------------------------------------------------------------
என்னுடன் உறைந்திருக்கிறாய்
என் நிழலாக......
என்னுடன் விழித்திருக்கிறாய்
என் கனவாக,,,,,,

என் மொழியில் கலந்திருக்கிறாய்
உன் வார்த்தையாக
என் கவிதைஎல்லாம் விரவிக்கிடக்கிறாய்
நம் காதலாக......
என்னுள்புகுந்து வெளியேவருகிறாய்
என் சுவாசமாக........
இதயமெல்லாம் நிறைந்துஇருக்கிறாய்
இனிமையாக......
என் மூளைக்குள்ளும் முகாமிட்டிருக்கிறாய்
முழுவதுமாக......
நானே நீயாக மாறியபின்னே
நீஎன்பதும் நான் என்பதும் தொலைந்து
நாமானபின்னே
வரும் ஒவ்வொருநொடியும் இணைந்தே
இருத்தல் ஆகிபோனோம்
உயிருக்குள் உயிர்கலந்தவேதியல்
மாற்றங்களால் பிரியும் சாத்தியங்கள்
சுயம் உணரும் வாய்ப்புகளை
விரும்பித்தொலைத்தோம்மடியும்வரை
அத்துனைஜென்மங்களிலும் நானே நீயாக....


என்றென்றும்காதலாய்...........
தனிமை கொல்லும் நேரம்
உன் நினைவு
வந்துசொல்லும்நேரம்
உறங்கா விழிகள் ரெண்டும்
உன்னையே நினைத்து இருக்கும்
மனதில் ஏதோ பாரம் 
உன் காதல் செய்த பாவம்
கடலாய் வந்த கனவெல்லாம்
காற்றே உன் காதில் சொல்லும்
வருகை நினைத்து
காத்திருக்கிறேன்
தனிமையில்
உன்னை நேசிக்க
ஆரம்பித்தநிமிடம்
எனக்கு தெரியாது...!!
ஆனால் இனிமேல்
வாழப்போகும்
நொடிகள் அனைத்தும்...
உன்னை நேசிக்க
மட்டும் தான்
என்பது தெரியும்
உன்னோடு இருக்கும்
பொன்னான நிமிடங்கள்
என்னாளும் தொடர்ந்திட
ஏங்குது நெஞ்சம்
என் இதயத்தை
திருடிய உன் காதலால்
இரவில் கூட என் இமைகள்
இயங்கிக் கொண்டிருக்கிறது
உறங்க முடியாமல்....
ஏன் இப்படி கொல்லுகிறாய்
என்மனதை