Saturday 8 November 2014

தனிமை கொல்லும் நேரம்
உன் நினைவு
வந்துசொல்லும்நேரம்
உறங்கா விழிகள் ரெண்டும்
உன்னையே நினைத்து இருக்கும்
மனதில் ஏதோ பாரம் 
உன் காதல் செய்த பாவம்
கடலாய் வந்த கனவெல்லாம்
காற்றே உன் காதில் சொல்லும்
வருகை நினைத்து
காத்திருக்கிறேன்
தனிமையில்
உன்னை நேசிக்க
ஆரம்பித்தநிமிடம்
எனக்கு தெரியாது...!!
ஆனால் இனிமேல்
வாழப்போகும்
நொடிகள் அனைத்தும்...
உன்னை நேசிக்க
மட்டும் தான்
என்பது தெரியும்
உன்னோடு இருக்கும்
பொன்னான நிமிடங்கள்
என்னாளும் தொடர்ந்திட
ஏங்குது நெஞ்சம்
என் இதயத்தை
திருடிய உன் காதலால்
இரவில் கூட என் இமைகள்
இயங்கிக் கொண்டிருக்கிறது
உறங்க முடியாமல்....
ஏன் இப்படி கொல்லுகிறாய்
என்மனதை

No comments:

Post a Comment