Tuesday 31 March 2015

உனது நினைவுத்தென்றல்
வாங்க முழுநிலவின்
நிழலில் முகமுயர்த்தி
முகாமிட்டிருக்கிறேன்
முழுநிலவின்
ஒளி முகத்தில்
முத்தமிடுகிறது
குளிர்ச்சியாக....
உதிர்கிறது
ஒற்றைபூஇதழொன்று
உச்சியிலிருந்து
உன் பிரதினிதியாக
என் இதழைக்
குறிபார்த்து
இதுகாறும் அடர்ந்து
படிந்திருந்த
ஆன்மாவின் அழுக்குகள்
விடைபெறுகின்றன
அகலுமாசை இல்லாமல்
உற்பத்தியாகிறது
புதிய நதி ஆழ்மனதில்
கரைப்புரண்டோடும்
ஆவலுடன்
அதுஓர்வானவில்லை
பிரசவிக்கும் இனிய
அவஸ்தை....
அருவிதலையில்விழும்
அனுபவம்..
மரிக்கொழுந்தின்
மனம் மயக்கும் வாசம்........
"உனது நினைவுத்தென்றல்
வாங்க முழுநிலவின்
நிழலில் முகமுயர்த்தி
முகாமிட்டிருக்கிறேன்
முழுநிலவின்
ஒளி முகத்தில்
முத்தமிடுகிறது
குளிர்ச்சியாக....
உதிர்கிறது
ஒற்றைபூஇதழொன்று
உச்சியிலிருந்து
உன் பிரதினிதியாக
என் இதழைக்
குறிபார்த்து
இதுகாறும் அடர்ந்து
படிந்திருந்த
ஆன்மாவின் அழுக்குகள்
விடைபெறுகின்றன
அகலுமாசை இல்லாமல்
உற்பத்தியாகிறது
புதிய நதி ஆழ்மனதில்
கரைப்புரண்டோடும்
ஆவலுடன்
அதுஓர்வானவில்லை
பிரசவிக்கும் இனிய
அவஸ்தை....
அருவிதலையில்விழும்
அனுபவம்..
மரிக்கொழுந்தின்
மனம் மயக்கும் வாசம்........"

No comments:

Post a Comment