Tuesday 31 March 2015

தோழி என்னைப்
பார்க்கவந்திருந்தாள்
பள்ளியில்
நெல்லிக்காய்
பகிர்ந்துன்னும்சினேகிதம்
பள்ளியில்
படிப்பைபற்றிக்
கவலைபடாதவள்
நான் விழுந்து
விழுந்துபடிப்பதை
பார்த்து அதிசயிப்பவள்
ஏன் படிப்பில்
அக்கறைஇல்லை
என்றால் 
படிச்சு என்னபன்னபோறேன்
என்பாள்
நான் பட்டணத்தில்
வரன்பார்த்து
தூரத்துசொந்தத்தில்திருமணம்
அவள்
சொந்தமாமனை
கட்டிக்கொண்டவள்
எத்தனை பிள்ளைகள்
என்றாள்...தனக்கு4
என்றபடி....
எப்போதும்
100/100மார்க்
வாங்கும்நான்
முட்டை வாங்கியதை
எப்படிச்சொல்வேன்.................

No comments:

Post a Comment