Tuesday 31 March 2015

எள்ளிச் சொல்கிறாய்
ஒற்றைச்சொல் ஒன்று
என் இதயத்தை
கூராக தைக்கும் என்றறிந்தே
இயல்பையே 
எள்ளிநகையாடும் 
உதடு சுழித்து
ஓரப்பார்வையில்
ஓடும் குருதியும்
உறைந்து போகும்
தொணியில்
திட்டமிடாமல் இயல்பாகவே
நீசொன்னது
சொல் அல்ல
கல் கொண்டுஎழுதிய
கல் படிமம்..
தவிர்த்திருக்கலாம்
ஆனால் கண்கள் காட்டிக்
கொடுத்திருக்கும்
அதன் வன்மத்தை

No comments:

Post a Comment