Monday 23 March 2015

அந்த அழைப்பிற்காகத்தான்
காத்திருந்தான்
பசிகிள்ளியவயிறுடன்
வாசலில்
உள்ளேயிருந்து
எப்படியும் அழைத்து
விடுவார் தன் தாத்தா
என்று......
தட்டெடுத்துவைக்கும்
ஒலிகேட்டவுடன் 
சற்று நம்பிக்கைவந்தது
உள்ளே அழைப்பு 
வந்ததது அவமானப்படுத்தும்
தொணியில்
”வந்து தொலை”
ஆனால் அவனுக்கு
உறைக்கவில்லை.....
பசியில் 
காதடைத்திருந்ததால்........
Like ·  · 

No comments:

Post a Comment