Monday 23 March 2015

அன்றுதீபாவளி
விடிந்துவிட்டது
மற்றகுழந்தைகளுக்கு
அவனுக்குமட்டும்
விடியவில்லை
கடன் வாங்கி 
இட்லி சுட்டிருந்தாள் அம்மா
பட்டாசுகேட்டு
அழுதவனுக்கு
முதுகில் கிடைத்தது
பட்டாசு
அவனை சமாதானம்செய்து
பழைய ரோல்
துப்பாக்கிகொடுத்து
சமாதானப்படுத்தினாள் 
அம்மா
அந்ததெருவில் 
சொந்தக்காரர்வீட்டில்
வெடித்துகொண்டிருந்ததை
வேடிக்கைபார்த்தான்
வேடிக்கைபார்த்துவிட்டு
கிளம்பும்போது
படாரென முதுகில்
அடிவிழுந்தது
”துப்பாக்கியதிருடிட்டாபோற
திருட்டுப்பயலே”
அந்தவீட்டுகுழந்தை
சொன்னது
“ அம்மா துப்பாக்கி 
இங்க இருக்கு”
எரிந்தகம்பிமத்தாப்பு
காலில் சுட்டது........

No comments:

Post a Comment