Tuesday 31 March 2015

ஒவ்வொரு
வார்த்தையிலும்
முற்றுப்புள்ளியாக
முட்களை வைத்து
வலிகளை தைக்கிறாய்
சூழல்களின்
அழுத்தம் மனதைபாரமாக்க
நீயும் சுழற்றிவிடுகிறாய்
உன் பங்குக்கு தலை
சுற்றும் வகையில்
உனக்காக சுற்றிய
கால்கள் கதறுகிறது
சுற்றும் செயலிழந்து
சிந்தை பிதற்றுகிறது
உன்மத்தமாகி
ரசித்தமனது
ரணமாகிக்குருதி
கொட்டுகிறது
உயிர்நீத்தலின்
உச்சமாக 
உதறிக்கொண்டிருக்கிறது
உயிர்கொடுக்க நீ வருவாயா
உதிரம் குடிக்கத்துணிவாயா.....

No comments:

Post a Comment