Monday 23 March 2015

மண்ணைநேசிக்கிறேன்
------------------------------------------------
பெண்ணைநேசிக்கும்
இவ்வுலகில்
நான் பிறந்தமண்ணை
நேசிக்கிறேன்......
என்ன இருக்கிறது
மண்ணில்
உயிர் நினைவுகள்
ஊறிக்கிடக்கின்றன
என் தந்தையின்
வியர்வை
என் தாயின்
கண்ணீர்துளி
என் தாத்தாவின்
நெஞ்சில்கடைசிவரை
இடம்பிடித்த
சளி
நான் அடிபட்டுச்சிந்திய
குருதி
என்சந்ததியின்
சாம்பல்
என்குழந்தையின்
எச்சில்
என்மூச்சில்
கல்ந்ததூசி
நான் தினமும்
மிதித்தாலும்
நான் விழும்போது
தாங்கும் மண்.........
ஆழ்துளைபோட்டு
தன்னைத்துளைத்தாலும்
நான் உயிர்வாழ
நீரைத்தரும் மண்
தான் காய்ந்தாலும்
எனக்கென ஒருவாய்
நீரை ஒளித்துவைத்திருக்கும்
அன்னையைபோலவே..மண்....

No comments:

Post a Comment