Monday 23 March 2015

ஒரு குடிமகனின் புலம்பல்......
கண்ணே 
நம் காதல் தோற்றுப்போனது
நீ 
இன்னொருவருக்கு மனைவியானாய்
8மாதம்கழிந்து 
இன்றுதான் உன்னைப்பார்தேன்
எனக்கு தாடி வளர்ந்திருந்தது
உனக்கு வயிறு வளர்ந்திருந்தது
நான் குடிகாரனாகிப்போனேன்
நீ குடித்தனக்காரியானாய்
நான் பாட்டிலோடு அலைகிறேன்
நீ உன் கணவரோடுஅலைகிறாய்
என் கழுத்தில் தூக்குகயிறு
உன் கழுத்தில் தாலிகயிறு
நான் கால்வாய்கரையில் தூங்குகிறேன்
நீ கணவனோடு தூங்குகிறாய்
நான் குடித்துவிட்டு வாந்திஎடுக்கிறேன்
நீ மசக்கையில் வாந்தி எடுக்கிறாய்
நானும் ஊறுகாய்தேடுகிறேன் சரக்கடிக்க
நீயும் ஊறுகாய் தேடுகிறாய் மசக்கைகாக
இன்னும் சிலநாட்களில்
உனக்கு பூசூட்டுவார்கள்
எனக்கு மாலை போடுவார்கள்...
Like ·  · 

No comments:

Post a Comment