Monday 23 March 2015

மனம் பதைபதைத்தது
எப்படியும்
கண்டுபிடித்துவிடுவார்கள் 
எவ்வளவு
துவைத்துப்போட்டாலும்
 
காட்டிக்கொடுத்துவிடுகிறது
 
இந்தக்கிழிசல் சட்டை 
 
டவுசர்கிழிசல் உட்கார்ந்தால்
 
மறைந்துவிடுகிறது
 
அந்தமுறுக்குமீசைக்காரணுக்கு
 
என்னை நன்கு தெரியும்
 
அவர் பார்ப்பதற்குள்
 
பாப்பாவுக்காவது ஒருவாய்
 
ஊட்டிவிடலாமென்றால்
“டேய் எழுந்திருடா
 
நாயே
 
யார்ரா இந்தபிச்சைக்காரனை
 
 பந்தியில் 
 
உள்ளே விட்டது........”

No comments:

Post a Comment