Friday 8 May 2015

ஜோராகமழைபெய்யுறப்போ
காருக்குள்ள நனையாமப்
பதட்டமா போறவங்களே 
எங்ககாருல ஏறிவாங்க
நனைஞ்சுகிட்டே
சந்தோசமா ரவுண்டுவரலாம்
டவுசர்நனைஞ்சிடும்னு
கவலையில்ல ஏன்னா
டவுசரே இல்ல
ரூவா நோட்டு நனைஞ்சிடும்ற
கவலை இல்ல ஏன்னா 
அதுமாதிரி எதுவுமில்ல
மழைபேஞ்சா வருத்தமில்ல
ஏன்னா எதயும் காயப்போடல
வயத்தத் தவிற அதுநனைஞ்சா
சந்தோசம் தான் அதுனால
நல்லாமழைபேயட்டும்
வயல் விளஞ்சா
எங்கவயிறும் நெறஞ்சிடும்
நீங்கதான் மழைபேஞ்சாத் திட்டுறீங்க
நாங்க மழைய க்கொண்டாடுறோம்
சளிப்பிடிச்சாபரவாயில்ல
வறட்சி சனிமட்டும் புடிக்கவேணாம்.......
Like · Comment · 

No comments:

Post a Comment