Friday 8 May 2015

பானைய 
அடுப்புலவைச்சிட்டு
ரேசன் கடைக்கு
போன ஆத்தா
பாதிநாள் போயாச்சு
வைச்சதண்ணி 
கொதிச்சுக்கிடக்கு
வயிறு பத்திஎரியுது 
பசிதாங்கம கதறுது
கடையில் கூட்டமா
இல்லகடைய 
சாத்திபுட்டானா
அரிசி என்ன ஆச்சு
ஆத்தா என்னாஆனா
ஒன்னும்தெரியலையே
வயிறும் பேச்சுகேட்லையே
பாத்துட்டுவறேன்னுபோன
அக்காவையும் 
காணலையே......
தரையும் கொதிக்குது
தலையும்கொதிக்குது
ஜீரத்தில 
அடுப்புலபானபோல.....
அய்யாமாரே அம்மாமாரே
பாத்தாச்சொல்லுங்க
அரிசியும் வேணாம்
ஆட்டுக்குட்டியும்வேணாம்
ஆத்தாவ வரச்சொல்லுங்க
அழுதகண்ணை 
தொடைச்சாப்போதும்,,,,,,,,,,,
Like · Comment · 

No comments:

Post a Comment