Friday 8 May 2015

காற்றாக உட்புகுந்து
காதல் இசை வாசிக்கிறாய்
ஆன்மாவை இசையால்
ஆகர்சிக்கிறாய்
இதயத்தை நிறப்புகிறாய்
இளம்காற்றின் இசைவடிவாய்
இருந்தாலும் இம்சிக்கிறாய்
இடைவெளிசற்று விட்டு
உன்வாசிப்பில் ஆன்மாவை
அதிரவைக்கிறாய்
சுயம் இழந்து
கதறவைக்கிறாய்.....
உடலின் ஒவ்வொருஅனுவையும்
வெப்பமேற்றி துடிக்கவைக்கிறாய்
இசைமுத்தங்களால்
இனிமையை நிரப்புகிறாய்
உன்விளையாட்டால்
உன்மத்தம் கொள்ளவைக்கிறாய்
உளறவைக்கிறாய்
உயிரை எடுத்துமீண்டும் கொடுக்கிறாய்
Like · Comment · 

No comments:

Post a Comment