Wednesday 20 May 2015

சின்ன சின்ன முத்தங்களால்
சிரித்து சிதறவைத்தாய்
வண்ண வண்ண வார்த்தைகளால்
வந்தனை செய்தாய்
கண்ணத்தில் முத்தமிட்டு
காதை க்கடித்தாய்
நெற்றியில் முத்தமிட்டுத்
தலைகோதினாய்
விழிகளில் முத்தமிட்டு
கனவுகளை விதைத்தாய்
கூந்தலைக்கோதிவிட்டு
கவிதைசொன்னாய்
காதணியை வருடிகாதல்
கதைகள் சொன்னாய்
இன்னும் என்னாசெய்யப்போகிறாய்
என்னை பைத்தியமாக்கியபின்னும்....

No comments:

Post a Comment