Wednesday 20 May 2015

உலகமே இந்தகோலி
உருண்டைக்குள்தான்
எங்களுக்கு 
உருண்டுபுறண்டு
விளையாடி
சாப்பாடுமறந்து
சண்டைபோட்டு
சட்டை
கிழிந்துகிழித்து 
வீட்டில்முதுகுவீங்க 
அடிவாங்கினாலும்
மறுநாள் காலை
மறுபடியும்
டவுசர்பையில்
கோலிக்குண்டுதான்
அதைஒளித்துவைக்க
ரகஸிய இடங்கள்
வாங்கிய அடியில் 
வீங்கியபின்பக்கம்
விளையாட்டில்
வலிதெரிவதே இல்லை
இழந்த அந்தப்பருவம்
மீளாதென்பதுதான்
வலிக்கிறது......(நன்றிபுகைப்பட உதவிFranklin Kumar)
Like · Comment ·  · 6081

No comments:

Post a Comment