Wednesday 24 June 2015

வீட்டுலைருக்குற
மொத்தபாத்திரத்தையும்
வயித்தையும்
கழுவிகவுத்தாச்சு
பானையிலதண்ணி
புடிச்சு வைச்சாச்சு
அம்மா அப்பா
வந்துதான் சமைக்கணும்
ரேசன்கடையில
அரிசிவாங்கப்போனாக
சும்மாகாசில்லாம
குடுக்குறாகலாமே
அதவாங்கிப்பாதிய
கடைலகுடுத்தா
பலசரக்குகுடுப்பாகலாம்
அதான் வாங்கபோயிருக்காக
அந்த அரிசி பாதிநாள்கூடவராது
அம்மாதான் வீடுகளுக்கு
வேலைக்கிப்போய்
ஏதாவதுகொண்டாரும்
அப்பாதொணைக்கிபோகும்
அப்பாவுக்குத்தான் 
வேலசெய்யமுடியாதே
உடம்புசரியில்லவேல
செஞ்ச எடத்துல ஆசிட்
பட்டு கண்ணுபோச்சே,,,,,,,,,

No comments:

Post a Comment