Saturday 20 June 2015

எங்க எப்பநான்
கெளம்புனாலும்
சூதானமா போய்ட்டுவா
ராசா என்பாய்.....
எத்தனை சண்டை
கோபமிருந்தாலும்
பசிக்குதும்மா
என்றால்
பதறிவிடுவாய்
மழலைநான் 
தடுக்கிவிழுந்தால்
நிலத்தை நிந்தனை
செய்திடுவாய்
நானே தப்புசெய்தாலும்
விட்டுக்கொடுக்க
மாட்டாய்,,
நான் தாத்தாவானபின்னும்
குழந்தைதான் உனக்கு நான்
அதுபச்சபுள்ள என்பாய்
உன் மகனுக்கு 
ஒன்னும் தெரியல
என்று என் மனைவிசொன்னால்
உண்டுஇல்லயென்று
செய்துவிடுவாய் அவளை
நீ போனபின்
எனக்கெனப்பேசயாருமே
இல்லயே அம்மா...............
Like · Comment · 

No comments:

Post a Comment