Tuesday 28 July 2015





கவலைகளற்று 
காத்துகிடக்கின்றது காற்று
கைகள்பட்டு 
வேர்த்துக்கிடக்கின்றது மண்
விழிகளில்பட்டு 
பூத்துகிடக்கின்றது நீர்
வேண்டுதலின்றி 
வெக்கையடிக்கிறது தேகம்
சலனமின்றி 
சயனித்திருக்கின்றது வானம் 
அனைத்துமறிந்த்தும் 
ஆறுதல்சொல்லாத நீ

No comments:

Post a Comment