Tuesday 28 July 2015

உன்னில்நான்
என்னில் நீ
இளம்சாரலில் 
குடைதவிர்த்து
என் முந்தானைக்குள்
நீஒண்டி
நடக்க வேண்டும் 
உன்னுடன் நெருக்கமாக 
தொலைதூர பயணம் 
ஜன்னல்சேர்ந்த
இரட்டை
இருக்கையில் 
உன் தோள் சாய்ந்தே
சந்தோஷக்காற்று
நம் முகத்தி அறைய
நல்ல இசையாக
என் பேச்சு உன் செவிநிரப்ப
உன்னுடன் இணைந்தே
கனவுகாணவேண்டும்
என்சோகங்கள்
என் விழி நீர்
துடைக்கும் உன் விரலை
நான் முத்தமிடவேண்டும்
என்கூந்தலிலே 
வாசமலர்கள்
சூடிக் கொள்வேன் 
உன் கைகளினால்
எங்கே நீ இருந்தாலும்
தனித்துப் பேசுவேன்
உன் விழிகளுடன்
வெற்றியைக் 
கொண்டாடுவேன் 
உன்மெல்லிய அணைப்பிலும்
,உச்சி முத்தத்திலும்
தோல்வியில் 
துவளும் போதும்
தேற்ற வேண்டும் 
நீ தோள் அனைத்தே
நோயிலும் 
உன் அருகிலே தான்
தூங்குவேன்
நீ தலை கோத
உன் அணைப்பின் 
இறுக்கத்திலே
உயிர் போகையிலும்
உன் மடியில்
உன் முகம் பார்த்தே, 
கரம் பற்றியே
உனக்காக நானும் 
என்னக்காக நீயும்

No comments:

Post a Comment