Tuesday 28 July 2015

உன்னுடனான 
போராட்டங்களில்
என்னை ஜெயிக்கவைத்து
தோற்கடிக்கிறாய்
என்னில் உள்புகுந்து
என்னை ஆட்கொண்டு
என்னில் உன்னைபுதைத்து 
என்னை எடுத்து 
உன்னில்விதைத்து
என்னைநீயாக்கி
உன்னை எனதாக்கி
உயிரும் மெய்யும்
கலந்து உயிர்மெய்யாகி
என்னைத்துளைத்து
நீ உட்புகுந்து
உன்னைபிளந்து
என்னுயிர்வாங்கி
என்னவெல்லாம்
மாயம் செய்கிறாய்
படுதலும் படாதலும்
தொடுதலும் தொடாதலும்
வர்மங்களாய் 
செயலாற்றுகிறாய்....
கொதிக்கவைக்கிறாய்
குளிர்விக்கிறாய்
தவிக்கவைக்கிறாய்
தழுவிக் கொல்கிறாய்...
பரிமாறுகிறாய்
பசியாறுகிறாய்.....
நீயே உணவாகிறாய்
உணவாக்குகிறாய்.......
ஏனடா என்னை கொள்கிறாய்
ஏனிப்படி என்னை கொல்கிறாய்.......

No comments:

Post a Comment