Tuesday 28 July 2015

மகபிரசவத்துக்கு உள்ளே
போயிருக்குவலிகூட
வந்துகத்துது
மொதரெண்டும்
பொண்ணாப்போச்சு
இந்தபிரசவத்துல
மகனோடவந்தா
வீட்டுக்குவா இல்லன்னா
வராதன்னு சொன்னாளாம்
மாமியா.....
அதெநெனச்சுதான் 
ரொம்ப அழுகுதுமக
அழுகாதடி அந்தமலக்கருப்பு
பாத்துக்கிடும் மகன் தான்
பொறப்பான் மகன் பொறந்தா
கடன்வாங்கியாவது
ரெட்டகெடாவெட்டி
பூஜைபோடுறேன்னு
வேண்டிருக்கேன்
கருப்பு சாமிஎறங்கி
சொல்லிருக்கு ஆம்பளை
பிள்ளகொடுத்துட்டு
பூஜையஏத்துக்கிறேன்னு....
கவலப்படாதம்மா.....னு
ஆறுதல்சொல்லி அனுப்பிட்டு
சாமியத்தான் 
கும்பிட்டுகிட்டுருக்கேன்
கருப்புதான் வழிபண்ணனும்
சாமி.......எம்புள்ளயக்காப்பாத்து.....

No comments:

Post a Comment