Tuesday 28 July 2015

முன்பனி மார்கழியில் 
பனிபிரிய பகலவன் 
முத்தமிடும் 
பக்திப்பொழுதில் 
அன்றலர்ந்த 
அழகிய மலர்கள் கொய்து 
என்றுமெனைக்காக்கும்
ஈசனை வேண்ட 
தாய்மடிதேடும் 
கன்றினைப்போல் 
கண்கள் பனிக்க 
தோழிபுடைசூழ 
தொண்டுகள் பல 
யாம் புரிய 
வேந்தன் எந்தன் காதலன் 
வம்சம் தழைக்க வே 
என்னில் கூடி
தன் வாரிசை 
என்னில் பெற்று 
தரணி யாழ அருள்செய் 
என்னை படைத்து 
கண்மூடிதவமிருக்கும் 
முக்கண் ஈசனே......

No comments:

Post a Comment