Tuesday 28 July 2015

காலயிலஎந்திரிச்சி
வாயக்கொப்புளிச்சிட்டு
ஒருசொம்புதண்ணி
குடுச்சுபுட்டு
வாசலக்கூட்டி
குப்பயக்கூட்டிஅள்ளி
குப்பதொட்டிலபோட்டுட்டு
மாட்டுச்சாணிய அள்ளி
வைச்சிதண்ணிலகலக்கி
வாசத்தொளிச்சிட்டு
லேசாவெயில்லபட்டு
காஞ்சஒடனே
அழகழகாகோலம்போட்டு
அதுலபூசணிப்பூவச்
சொருகிவைச்சுட்டு
ஓரமாநின்னு பாத்தா
சொக்கிப்போவீங்க
இத்தனவேலபண்ணதும்
தானாவயித்தகலக்கி 
கொள்லைக்கிவந்துடும்
வெளிச்சம்வரதுக்குமுன்னாடி
போகனுமுள்ள....இப்போ
ட்வுன்ல மகவீட்டுக்கு
போயிருந்தேன்...
அங்கமாட்டுசாணியுமில்ல
கோலம்போடஎடமுமில்ல
கொள்லயுமில்ல
பசியுமில்ல எல்லாம்
கொள்ளைபோயிடுச்சாம்.........
A Muthu Vijayan Kalpakkam'

No comments:

Post a Comment