Tuesday 28 July 2015





மனம்கிடந்து தவிக்கிறது
மாயக்கண்ணாஉன்
மாயக்குழல்
இசைகேட்காமல்
செவிகள் இரண்டும்
கூர்தீட்டிக்கிடக்கின்றன
உன்குழல் இசை
கேட்கும் ஆசையில்
கேட்காமல் சோர்ந்து
தவித்து கொல்லும்
கோபமுற்று
கண்ணீர்மல்கி
எதிர்பார்த்து
ஏங்கி ஏசிபின்
தன்னைத்தானே 
கடிந்துகொண்டு
கழிவிரக்கம்
தன்மீதேகொண்டு
படும் அவஸ்த்தை
காணச்சகிக்கவில்லை
எங்கிருந்தாலும் 
அனுப்பிவிடு கண்ணா
உன் குழலிசையை
என் உயிர்காக்க..
மன்றாடுகிறேன்.....உன்னிடம்

No comments:

Post a Comment