Tuesday 28 July 2015






என் இதய அறைகளின்
இருண்டபக்கங்களுக்கு
உன் வெளிச்சப்
பார்வைகள்தான்
விளக்கம்கொடுத்து 
மகிழ்ச்சி
வெள்ளை அடித்தது
உன் உருவமே அதில்
ஓவியமாகஉருவானது
எந்தபக்கத்தை புரட்டினாலும்
உன் முகமே 
முறுவளிக்கிறது
வேறு எதையும் காண
இயலவில்லை.
என்பார்வைக்கோளாறா
இல்லை உண்மையே
அதுதானா புரியாமல்
தவிக்கிறேன் தூக்கம்
தொலைக்கிறேன்
தலையணை நனைக்கிறேன்......
விழிகளைதுடைக்ககூட
மனமில்லாமல்.........

No comments:

Post a Comment