Tuesday 28 July 2015




சின்னசின்னப்பூக்களாக
சிரிப்பை பூக்கவைத்தாய் உன்
கொழுந்து இலைகளின் நடுவே
வெள்ளைமுத்துகளால்
கன்னத்திலே குழிவைத்து
எனக்கு குழிபறித்தாய்
நான் காதலுடன் அதில்விழ
விழிகளில் வலைவிரித்தாய்
இந்தப்பறவை பூப்பறிக்க
வரும்வேலையில் 
நன்றாக சிக்கும்படி
இவ்வளவுதேவையில்லை
என்னைபிடிக்க 
உன் அழகுக்கவிதை
ஒன்றுபோதும்உடனே
என்னை பிடிக்க.........

No comments:

Post a Comment