Tuesday 28 July 2015

மெல்ல அருகிலவந்து 
மென்மையாக 
தோள்கள்பற்றி
விழிகளை 
முடச்செய்கிறாய்
விரல்களால் 
கூந்தல் கோதுகிறாய்
மடிதனில் என்னைசாய்த்து
மயக்கும் கதைசொல்லுகிறாய்
என்மனதை அள்ளுகிறாய்
கன்னத்தில் முத்தமிட்டு
காதைக்கடிக்கிறாய் பின்
கள்ளத்தனமாய் சிரிக்கிறாய்
கனவிலெசொன்னதெல்லாம் 
காட்சிபடுத்துகிறாய்
என்னை கலங்கவைக்கிறாய்
காதலின் 
எல்லைகளைத்தாண்டி
காதல்செய்கிறாய்
என்னை கண்கள் 
மூடவைக்கிறாய்
ஒவ்வொரு செல்லிலும்
உன் உருவம் பதிக்கிறாய்
என் உதிரத்துடன்
ஒன்றாய்கலக்கிறாய்
என்னோடு உயிராய் உயிராய்
இணைத்துவிடுகிறாய்
என்னைக்கொன்று
மறுபிறவிதருகிறாய்
நான் வேறாகமாறிவிடுகிறேன்
உன்னுள் ஒன்றாகிவிடுகிறேன்...
என்னமாயம் இது....கண்ணா....

No comments:

Post a Comment