Tuesday 28 July 2015

இதயத்தில் சந்தேகக்
கோடுவரைகிறாய்
இதயக்கூட்டில் 
உன்னை
குடிவைத்ததை 
அறியாமலே
வார்த்தைகளால்
கருவண்ணம் பூசுகிறாய்
வலிகளை உணராமலே
பிறர்சொல்கேட்டு
பேதமைசெய்கிறாய்
விழிகளை
துடைக்கவேண்டியநீயே
தூசிகளைத்தூவுகிறாய்
புரிதலில் பிழைசெய்து
புண்ணாக்குகிறாய்
என் இதயசுவர்களை..........
என்னசொல்லி 
புரியவைப்பேன்
என் இதயத்தை
காட்சிப்படுத்த..............

No comments:

Post a Comment