Tuesday 28 July 2015





அம்பதுபைசாவஎடுத்துகிட்டு
அலைஞ்சுஅந்தஆளைக்கண்டு
பிடிச்சு வாங்கிகொடுத்த
கடிகாரம்ஆசை ஆசையா நீ
அதுல மோதிரம்
கழுத்துசெயிணுஇப்புடி
என்னவேணுமானாலும்
செஞ்சுதருவாரு
அந்த ஜவ்வுமிட்டாய்காரரு
எனக்கு என்னவேணுமானாலும்
வாங்கிக்கசொன்ன பையில
இருந்த ஒரு ரூவா தெம்புல
இதெல்லாம்போடு
கூடவே கழுத்துல நகைபோடுன்னு
நான் கேட்டேன் 
நீ ஜவ்வுமுட்டாயில
தாலிசெஞ்சுபோட்ட
எனக்கு ஒருமாதிரி சந்தோசம்
நீதாண்டி எனக்கு பொண்டாட்டினு
கையில் அடிச்சுசொல்லி
என்னசிரிக்கவைச்ச.....
ஆனா இப்போ வசதி வந்தவுடன்
என்னப்புடிக்கலன்னு
சொல்லிட்டயே 
ஜவ்வுமுட்டாய் மாதிரியே
சீக்கிரம் பிசுபிசுத்துபோச்சே
நம்ம அன்பு எங்கபோயழுவேன்........

No comments:

Post a Comment