Tuesday 28 July 2015





விடியும்பொழுது
எதிர்பார்த்து 
விழிகள் 
விழித்திருப்பது
விடாமல் 
உன்னைகாணத்தான்
விடிந்தபின்னும் 
விழித்திரைகளில்
உன் முகம் காணாது
போனதேனடா 
காத்திருத்தல் 
சுகம்தான் 
ஆனால் அதற்கு
காலஎல்லையுண்டு 
கண்ணீர்தான்
அந்த எல்லை 
அது விழிகளில் 
துளிர்ப்பதற்குள்
துளிர்த்து விடு 
மொட்டாகவாவது 
மலருவரைக்காத்திருக்க 
மனசு தயார்தான்......

No comments:

Post a Comment