Saturday 10 October 2015

இந்தபேரப்புள்ள
இடுப்பவிட்டு
எறங்கமாட்டேன்றான்
எப்பபாத்தாலும்
அப்பத்தாதூக்கு தூக்குனு
விடமாட்டான் 
இந்தநேரத்துல இவனுக்கு
சாக்கிலட்டுவேணுமாம்
கடக்காரு கடயமூடுட்டாரான்னு
தெரியல இடுப்பு வலிக்குது
வாலிப வயசா எனக்கு
5மைலுபோய் தண்ணி
கொண்ணாந்தஉடம்புதான் 
இப்ப முடியல
இவனோட அப்பன்
ஏம இடுப்பில
இருக்கமாட்டான் ஒடிட்டேதான்
இருப்பான் ஆனா இவன்
என்னவிடமாட்டான்
விட்டாநீபோய்ருவ ஊருக்குனு
சொல்லிட்டே ஏங்கூடத்தான்
இருப்பான் ஆனா நா
இங்கேயே இருக்கமுடியுமா
மத்த மகனுக வீட்டுக்கு
போகனும்ல மத்தபேரம்பேத்திக
தேடுவாகளே இவனுக்கு
நான் ஒரே அப்பத்தா
ஆனா எனக்கு அஞ்சாறு இருக்கே
ஆனா இவம்புள்ளைக்கு
அந்தபிரச்சனை இல்ல
ஏன்னா இவன் ஒரேமகந்தான்
இனிமே வாரபுள்ளகளுக்கு
சித்தி சித்தப்பா மாமா அத்தை
மாதிரி உறவெல்லாம் 
இருக்காதுபோலைருக்கு.....
என்னத்தச்சொல்ல ..........

No comments:

Post a Comment