Sunday 11 October 2015

பிரிவதென்று முடிவெடுத்தால்
உதிரம் வழிவதுமேன் விழிகளில்
உதிருமென்று முடிவெடுத்தால்
அழுதிடுமேமலர்களும்
விழுவதென்றுஆகிவிட்டால்
பனிக்கட்டியும் உருகிடுமே
கொட்டுவதென்பதே விதியானால்
நொறுங்கிடுமே இலைகளும்
பெய்வதுதான் காலமென்றால்
அழுதிடுமேமழைமேகமும்
விழிகள் வீங்கிஅழும்போதும்
விரல்களுக்கு தயக்கமேனோ
வாய்விட்டுஅரற்றும் போதும்
வார்த்தைகள் வரமறுப்பதேனோ
நெஞ்சம் குலுங்கும்போதும்
கொஞ்சமும் தவிர்ப்பதுமேனோ
காரணம் சொல்லிவிடு இல்லை
கண்களைத்துடைத்துவிடு
வேறேதுவும் முடியவில்லையென்றால்
வெட்டியெனை கொன்றுவிடு

No comments:

Post a Comment