Saturday 10 October 2015




முத்தங்களால் என்னை
முறுக்கேற்றுகிறாய்
வருடல் களால்
என்னை வசப்படுத்துகிறாய்
உன் மூச்சுக்காற்றால்
என் பேச்சைக் குறைத்து
பெருமூச்சாக்குகிறாய்
விரல்களால் நாணேற்றி
காமன் அம்புகளை
தைக்கவைக்கிறாய்
தொடு வர்மக்கலையில்
வல்லவனாக நீ
என்னை தோல்வியுற
செய்கிறாய்
கட்டிஅணைத்து
பட்டாம் பூச்சிகளை
போல் பறக்க செய்கிறாய்
கெட்டதுபோலவே
நல்லது செய்கிறாய்
என்னுள் புகுந்து 
என்னை நீ ஆக்குகிறாய்
என்னுள் புகுந்து
என்னை ஆட்கொள்ளுகிறாய்

No comments:

Post a Comment