Sunday 11 October 2015

நீங்கள் ஏரிகள்
எல்லாவற்றையும்
வரைபடத்தில்
மறைத்துவிடுங்கள்
ஏதோ ஒரு நகரின் பெயரில்
குளங்க ளையெல்லாம்
குழிதோண்டிப்புதைத்துவிட்டு
குடியிருப்புகளைக் கட்டுங்கள்
கிணறுகளையெல்லாம்
குப்பைகளைப்போட்டு
குப்பைத்தொட்டியாக்கிவிடுங்கள்
மலையில் உள்ள

 மரங்களையெல்லாம்
வெட்டிவிட்டு 

தங்குமிடங்கள்கட்ட
தனியாருக்குத்

தாரை வார்த்திடுங்கள்
ஆறுகளை நாணல் பயிரிட்டு
மணல் மேடாக்கி

 மணல் குவாரி
ஏலம் எடுத்து 

விற்பனை செய்யுங்கள்
ஆகாயத்தாமரைக்கும்

 நீர்குடிக்கும்
தாவரங்களுக்கும் 
நீர் ஊற்றி காப்பாற்றுங்கள்
யாரும் தடுக்கமாட்டார்கள்
ரேசன் கார்டு

 ஒன்றுக்கு ஒருலிட்டர்
தண்ணீர்மட்டுமே என்ற
வரிசையில் 

அனைவரும் நிற்கும்போது
வரிசையில் இடமில்லாமல்
ஆடுமாடுகள் பறவைகள்
இறந்துகிடக்கும் விரைவில்
விரைவில் ஆகும் நம் நிலையை
முன் உரைத்தபடி.....

கொஞ்சநாளில்
தாகம் என்று தண்ணீர் கேட்க 
உயிரினம் எதுவும் இருக்காது

No comments:

Post a Comment