Saturday 10 October 2015

முன்னிரவில் உன் 
முத்தங்களால்என்னை 
திணறடித்தாய்
முன்னங்கால்களில்
மீசையால் கோலமிட்டாய்
பாதங்களிலில் இறகால்
சாதகம்செய்தாய்
என்பொறுமைக்கு நீ
பாதகம்செய்தாய்
தொட்டும்தொடாமலும்
வம்புகள்செய்தாய்
சிட்டுக்குருவிபோல்
முத்தம்கொடுத்தாய்
சீராகவந்தமூச்சை
அனல்கக்கவைத்தாய்
கண்களை மூடவைத்து
காதல் ரஸம்தந்தாய்
பாதரஸம் எகிறும்
வெப்பம்தந்தாய்
மோகரஸம் தந்து
முடித்துவைத்தாய்
இரவுமுழுதும் விண்ணில்
பறக்கவைத்தாய்
புதிதாக எனைபிறக்கவைத்தாய்.......

No comments:

Post a Comment