Saturday 10 October 2015

இந்தக்கொலுசைப்
பாக்கும்போதெல்லாம் 
கண்ணீர் முட்டும்
என் மகளுக்கு என்
அப்பா வாங்கிப்போட்டது
யார்யார் கையகாலயெல்லாம்
புடிச்சி கடன் வாங்கி
நகைக்கடையிலும்
பாக்கிவைத்து வாங்கிவந்து
போட்டார்......
தங்கத்தில் செயின்போட
ஆசைதான் கையில
காசு இல்லமா நு
கண்கலங்கி சொன்னது
என் கண்முன்னாடி
நிக்குது இன்னமும்
இப்போ அதப்போட்ட
அவரு இல்ல..
பொறந்தவீட்டுக்குபோனா
வாம்மா நு கூப்பிட்டு
ஒரு சொம்பு தண்ணி
கொடுக்க ஆளில்ல
தம்பி பொண்டாட்டி
ஏன் வந்தேன்னு கேக்கல
அவ்வளவுதான்......
பொறந்தவீடெல்லாம்
அம்மா அப்பா இருக்குறவரைதான்........

No comments:

Post a Comment