Sunday 11 October 2015

பள்ளிமுடிந்து வீடுதிரும்பியதும்
பசிவயிற்றைக்கிள்ளும் 
அடுக்களையில் தேடினால்
அத்தனைபாத்திரமும் 
கழுவி கவிழ்த்தபடி 
அம்மாஉனிடம் நான் சொன்ன 
அடுத்தநொடியில் 
டப்பாக்கள் பல குடைந்து 
கொஞ்சம் ரவைகண்டுபிடித்து
எண்ணைஇல்லாததால் 
வெறும் கடுகு வெடிக்கவைத்து
பட்டமிளகாரெண்டுபோட்டு 
காய்ந்தகறிவேப்பிலை 
பிச்சிபோட்டு 
தண்ணீர்கொதிக்கவைத்து 
லேசா உப்பிட்டுரவைபோட்டு
சரட்டுசரட்டுன்னு கிண்டும்ப்போதே 
வாசம் ஆளைதூக்கி 
நாமுழுதும் சுரந்துவிடும் 
பாசமுடன் தட்டில் 
நீ வைக்கும்போதே 
என் உயிர் லயித்துவிடும் 
வயிறும் நிறைந்துவிடும்
உன் மனம்போலவே..

No comments:

Post a Comment