Saturday 10 October 2015




என்னைப்பெண்ணாக உணர்ந்த
ஓர்மாலைப்பொழுதில் 
வெட்கமும் பயமும் 
தயக்கமும் மிரட்சியும்
கலந்தகலவையான மனநிலை
வியர்வை மழையில் நனைந்து
இதயம் தாருமாறாய் துடித்து
மரணம் சுவைத்த அனுபவம்
எனக்குள் புதைந்து வளரும்
பெண்மை உணரும்
அற்புத உணர்வுகள்
மஞ்சளின் மணமும்
மலர்களின் மணமும்
மனம் கிளறத்தொடங்கும்
அந்த மனம் தேடும் மனமாக
நீ வந்தாய் என் தேடல்களின்
எல்லைகளாய் நீ
என்னைதொட்டாய்
மறுபடியும் நான் மீண்டும்
என்னை உணர மலரவைத்தாய்
வெட்கப்படவைக்கிறாய்
மிரளவைக்கிறாய்
வியர்வையில் நனைக்கிறாய்
அடிக்கடி என்னை........

No comments:

Post a Comment