Saturday 10 October 2015




உண்மையச்சொல்லப்போனா 
இது எனக்கு 
இன்னொரு அம்மா
நான் பிறந்தகொஞ்சநாள்லயே
எங்க அம்மா எனக்கு 
பால்குடுக்கமுடியல
அப்ப இருந்து போனமாசம்
வரைக்கும் எனக்கு 
இந்தப்பசுமாடுதான்
பால் குடுத்துச்சு
நானும் தினம் காலையில
வந்து அது தலையத்
தடவிக்குடுப்பேன்
அதும் கன்னுக்குட்டிக்கு
மாதிரி உரசி க்குடுக்கும்
சமயத்துல என்ன முகத்தோடு
வைச்சு தேய்க்கும்
அதுக்கு நான் கன்னுமாதிரி
எனக்கு அது இன்னொரு அம்மா
இப்போ பாலு வத்திப்போச்சு
அதுநால அப்பா விக்கபொறாறாம்
நான் கெஞ்சினேன் அப்பாட்ட
இது அம்மாமாதிரிதானே 
வேணாம் நு அதுக்கு
நீ சின்னபையன் ஒனக்கு
ஒன்னும் தெரியாதுன்னுட்டாரு
வித்தா அடிமாட்டுக்கு
கேரளா கொண்டு 
போய்ருவாங்கலாமே
அம்மா அடிமாடா ....?
எனக்கு அழுகை 
அழுகை யாவருது,
நீங்களே சொல்லுங்க
சின்னப்பையன் நான் 
அன்பும் பாசமும் வைக்ககூடாதா.....

No comments:

Post a Comment