Saturday 10 October 2015

வைத்தபொருள் 
வைத்த இடத்தில் இல்லை
என்னுடைமை என
வைத்திருந்த பல
தன்னுடமையாக்கிகொண்டான்
நான் சமைக்கும் உணவை
நா ருசித்து உண்கிறான்
என் கைப்பக்குவம்
விரும்பிஉண்கிறான்
என்னைஅன்னையாக்கிய
அழகு மகன் 
என்னை எனக்கு உணரச்செய்த
அன்புசெல்வன்...
அழுக்குத்துணிகளைக்கூட
அன்னைதுவைத்தால் 
அதில் ஒரு அழகு என்பான்
அம்மா நீ தான் அழகு என்பான்
எனக்காக தான் கற்ற வித்தைகளை
எனக்கு காண்பித்து 
அதிசயக்கசெய்வான்
தான் கற்ற மிருதங்க இசை
எனக்காக வாசித்து
மகிழவைப்பான் மகிழ்வான்....
இழந்த எல்லாவற்றின்
வடிவமாக செல்லமே
உன்னைக்கண்டு மகிழ்கிறேன்
நீ என் மகனல்ல
என் தந்தையடா செல்லம்....

No comments:

Post a Comment