Saturday 10 October 2015



கம்மாயில மிதிபாவக்கா
போட்டுருக்கேன்
ராத்திரிஅங்குனயே
போய்படுத்துக்கெடந்து
வெள்ளனா எந்திரிச்சு
பாவக்காயப்புடுங்கி
அதக்கம்மாத்தண்ணியில
கழுவி சாக்குலபோட்டு
தலைச்சுமையாதூக்கிட்டு
நடந்தா காலுவழுக்கும்
கழுத்துகெஞ்சும்
கீழேயும் பாத்துநடக்கனும்
பூச்சிபொட்டு கெடக்கும்
கரையேறிமார்கட்டுக்கு
நடந்தேபோய் 
எடைபோட்டுவித்துப்புட்டு
காசவாங்கி.தொண்டைக்கு
நாடாருகடையில ஒருவடையும்
காப்பித்தண்ணியும் குடிச்சுப்புட்டு
பொடிநடையாவீட்டுக்கு
போய்காசக்குடுத்தா
வட்டிக்காரன் வசூலுக்குவந்துநிப்பான்
ஒழைக்கிறதுல முக்காவாசி
அவந்தான் திங்குறான்
இந்தகையும் காலும்தான்
மிச்சம் நமக்கு
என்னத்த சொல்ல மக்கா.....

No comments:

Post a Comment