Saturday 10 October 2015



மக வீட்டுல இருந்தவரைக்கும்
ஏதாவது வேலைக்கிபோய்
சம்பாரிச்சதுல கஞ்சி
ஊத்துச்சு..பாவம்
எத்தனநாளைக்கு
நம்மவீட்டுலயே 
வைச்சிருக்குறது
என்னால முடிஞ்ச அளவு
கடன வாங்கி இருந்த
கொஞ்சூண்டு நிலத்தையும்
வித்து பொண்டாட்டி
வைச்சிருந்த தோடு
மூக்குத்திபோட்டு
கட்டிகொடுத்தேன்
மக பக்கத்து ஊருலதான்
வாக்கப்பட்டுருக்கு
சுமாரான சம்பந்தம்தான்
ஏதோ பொழப்புஓட்டுது
எனக்குத்தான் 
கஸ்டமாபோச்சு
கஞ்சிக்கிவழியில்லாம
அப்போ அப்போ வந்து
தூக்குபோணில
ஏதாவதுகொடுக்கும் 
மகராசி...இல்லன்னா
பசில போகவேண்டியதுதான்.....
அதுவும் எத்தன நாளைக்கோ.........

No comments:

Post a Comment