Saturday 10 October 2015

தூக்கம்வருதுன்னு
ஒருவார்த்தைசொல்லிருந்தா
வானத்திலதொட்டில்கட்டி
கானம்பாடி
தூங்கவைச்சிருப்பேன்
நட்சத்திரங்களைபுடிச்சி
தொட்டிலுக்குள் போட்டு
நாள்பூராவிளயாடவிட்டுருப்பேன்
மேகத்தைபுடிச்சிமெத்தயா
விரிச்சிருப்பேன்
தாகத்த தணிக்க மழைய
சிறைபிடிச்சிருப்பேன்
புயலபுடிச்சிவேகம்குறைச்சி
தென்றலா அடிக்கவைச்சிருப்பேன்
மின்னலெமிரட்டி வெளிச்சம்
குறைச்சிருப்பேன்
இடிய படியவைச்சி 
இறுக மூடிருப்பேன்
கடலை கால்லவிழுந்து
அலையநிறுத்தியிருப்பேன்
தூங்காமபடுத்துறீயே
முதுகுலரெண்டுகுடுத்திருப்பேன்.....

No comments:

Post a Comment