Saturday 10 October 2015

மாயம் செய் தாயோ 
***********************
போதையை ஊட்டுகிறாய்
உன் இதழ் அட்சயப்பாத்திரத்தில்
இருந்து கொஞ்சம் கொஞ்சமாய்
உன் போதையில் மூழ்கி
எடை அதிகரித்து
இன்பக்கடலில் மூழ்குகிறேன்
இன்பக்கடலில் மூச்சுமுட்ட
அழுத்துகிறாய் என்னை
மூச்சு முட்டி உயிர்காக்க
எழுந்து மேல் வந்தால்
மீண்டும் முத்தபோதை
ஊட்டுகிறாய்
இதழில் போதை கொடுத்து
எங்கெங்கோ 
இன்பக்கடலின் மூலை
முடுக்கெல்லாம் அழைத்துச்சென்று
காட்டுகிறாய்
என்னை எனக்கே 
சுற்றிக்காட்டுகிறாய்
என்னில் இசைஎழுப்பி நீ ரசித்து
என்னை ரஸிக்கவைக்கிறாய்
எனக்குள்ளே நீபுகுந்து
என்னைகொதிக்கவைக்கிறாய்
ஏழுஸ்வரமும் என்னில் எழுப்பி
எனக்கு நீகிட்டும் ஸ்வரமாகிறாய்
உன்முரட்டுத்தனத்தைக்கூட
விரும்பவைக்கிறாய்
மென்மையை வன்மையாக்கி
என்னைக்கொல்கிறாய்
அனைத்தும்செய்துவிட்டு
அணைத்துக்கொள்கிறாய்
இவையாவும் நான் விரும்பி
கேட்கவைக்கிறாய்
நானிப்படியாவதற்கு.....
என்னமாயம் செய் தாயோ .......

No comments:

Post a Comment