Sunday 11 October 2015

கடைக்குப்போறதே
பெரியவிசயம் அதுல
இவனைத்தூக்கிட்டுப்
போகனுமாம் கைகளைத்
தூக்கி இக்கு இக்கு
நு அடம்புடிக்கிறான்
இந்ததம்பிபயல்
அம்மாவசதியா
என்கிட்டதள்ளிவிடுகிறாள்
இவன் சுய்யா புய்யா
ங்கு ஞாங் நு ஏதோ
வாயில் எச்சல் ஒழுகபேசி
என் சட்டய நனைக்கிறான்
கடையிலகண்டதப்பாத்து
கைநீட்டுவான் கடைக்காரு
இவன் வாயில் சர்கரைதடவி
அனுப்புவாரு இவனும்
சப்புகொட்டுவான்
அதுக்குத்தான் வரறது
அடம்புடிச்சு........

No comments:

Post a Comment